Thursday, August 23, 2012

பல"சரக்கு"கடை-10 (23/08/2012)

2G மிஞ்சிட்டோம்ல





இந்தியா வளர்ந்து வரும் நாடுன்னு சரியாத்தான் சொல்றாங்க,அதை நிரூபிக்க நமது அரசியல்வாதிகள் ஆற்றும் தொண்டு,உழைப்பு அளப்பரியது,இதுவரை இந்திய ஊழல்களின் ராசாவாக இருந்த 2G ஊழலை மிஞ்ச செய்திருக்கின்றனர் நிலக்கரி ஊழல் மூலமாக கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடியாம்,2G 1.76 லட்சம் கோடி என்பதை இங்கே நினைவில் கொள்க.இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை காட்டுவதற்காகத்தானே தவிர வேறு ஏதும் உள்நோக்கமில்லை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.



தமிழகம் நெ.1

இதுவும் வளர்சியைப்பற்றிய ஒரு செய்திதான்.ஆனால் இந்த வளர்ச்சிகள் உகந்ததாக தெரியவில்லை.இது அதிர வைக்கும் வளர்ச்சி,கடந்த ஆண்டு இந்தியா மொத்தத்துக்கும் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்.இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.கிட்டத்தட்ட 15,500 பேர் பலியாகி உள்ளனர்.நாம மட்டும் தான் ரோட்டுல போறோம் என்ற மனநிலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இருக்கும் வரை நாம தான் கொஞ்சம்(நெறையவே) பயந்து பயந்து போகணும்.


ஆகாககாகா

கொஞ்ச நாளைக்கு முன்னால என்னோட மொபைல் நெட்வொர்க் ஏதோ ஒரு பேக் எனக்கே தெரியாம ஆக்டிவேட் செஞ்சுட அத டீ ஆக்டிவேட் செய்ய கஸ்டமர்கேர் கூட ஓரியாடிக்கிட்டு இருக்கும் போது மயக்கமடைய வைத்த ஒரு விஷயம் இது ,கணினியில் வரும் குரல் உங்கள் மொபைல் வேலை செய்யவில்லை என்றால் ஆறை அமுக்குங்கள் என்றது.


அம்மம்மா.....

""நூலகங்கள் நாட்டின் அறிவு களஞ்சியங்கள். கேடில் விழுச்செல்வமான கல்வியை முழுமையாக பெற வேண்டுமாயின், அதற்கு பெருந்துணையாக உள்ளது நூல் நிலையங்கள். ‘பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்து கட்டும் நம் மக்கள், படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்றுதான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று அண்ணா கூறுவார்."" இது நா சொன்னதில்லைங்க கொஞ்ச நாளைக்கு முன்னால அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டும் ,திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடைக்கு விட்டும் சாதனை புரிந்த அரசுக்கு சொந்தக்காரர்தான்.

HAPPY BIRTHDAY CHENNAI 



                             [ இத போடலன்னா சென்னைன்னு`நம்ப மாட்டாங்க]

சென்னைக்கு நேற்றைக்கு(AUG-22) 373-வது பிறந்தநாள்.கல்லூரிபடிப்புக்கு முன்னால் சிறு வயதில் ஒரே ஒரு முறை சென்னைக்கு போயிருக்கிறேன்.கல்லூரிபடிப்பு முடித்தவுடன் ஆண்டுக்கு மூன்று,நான்கு முறை போய் வருவதுண்டு,ஒவ்வொரு முறையும் ஏதாவது வியப்பூட்டும்,அதிர்வூட்டும்,மகிழ்வூட்டும்,நகைப்பூட்டும் உணர்வுகளை தந்திருக்கிறது.தமிழகத்தின்,தமிழர்களின்  தவிர்க்க முடியாத ஊர் சென்னை மேலும் பல்லாண்டு கால இத புகழ் உலகெங்கிலும் விரவித்திரிய வாழ்த்துகள்.

நம்மால் என்ன முடியும்?

பள்ளியில்  ஸ்ட்ரக்சர் இல்லாததால் தனது வாழ்வின் மீதி பகுதியை படுக்கையிலே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவன் லோஹித் அவர்களுக்கு நமது பதிவர்கள் சார்பில் உதவிக்கரம் நீட்ட முன்வந்து அதை செயல்படுத்த நமது பதிவர்கள் இரவுவானம் சுரேஷ் ,வீடு சுரேஷ்குமார் ஆகியோர்  அவரை நேரிலும் சென்று சந்தித்து வந்திருக்கிறார்கள்.மேலும் தகவல்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விணணப்பம் !!!


மதில் மேல் நிலைமை 


மிக தீவிரமாக,பிரமிக்கத்தக்க அளவில் ஏற்பாடாகி வருகிறது சென்னை உலகத்தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு.இதில் கலந்து கொள்ளவேண்டுமென்று தீர்மானித்து இருந்தாலும்,பணிச்சூழல் நிச்சயமரதாக இருக்கிறது,ஆகவ்வே நண்பர்களே  வாப்பு கிடைத்தால்  நிச்சயம் என்னை  இணைத்துக்கொள்கிறேன்.
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-10 (23/08/2012)"