Friday, March 30, 2012

பாதுகாப்பு உணர்வு எப்போ வேணும்?


நமக்கு அன்றாட வாழ்வில் தேவையான அத்தியாவசியமானவை என்றால் நினைவுக்கு வருவது தண்ணீர்,உணவு,உடை,இருக்க இடம் இதுதான் உயிர் வாழ அத்தியாவசிய தேவை என சொல்லுவோம்.ஆனால் நமக்கு எல்லோருக்கு இருக்கும் பெரும்பாலும் நாம் மற்றவர்களுக்கு சொல்லும்(நானும் தான்)ஒரு விசயத்தை எப்போதுமே மறந்து விடுகிறோம்.அது பாதுகாப்பு உணர்வு.

                        
பாதுகாப்பு என்னெல்லாம் இருக்க வேண்டும்,சரி எப்போதெல்லாம் வேண்டும். சுருக்கமா சொல்லனும்னா எங்கேயும் எப்போதும் வேண்டும்.
பாதுகாப்பு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்.

1.மின்சாரம்

உபயோகமில்லாத பிளக்குகளை மூடி போட்டு வைப்பது.நாமாக மின் இணைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய முயல்வதை தவிர்ப்பது,குறைபாடுள்ள மின் சாதனங்களை இயக்காமலிருப்பது,grounding,earthing சரியாக உள்ளதா என பார்ப்பது போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

2.சமையல் எரிவாயு.

       
சமையல் எரிவாயு உபயோகம் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது.காஸ் சிலிண்டரை கவனத்துடன் கையாள பழகிக்கொள்ள வேண்டும்.காஸ் கசிவு என உணர்ந்தால் எல்லோரும் அறிந்ததைப்போல வீட்டின் எல்லா திறப்புகளையும் திறந்துவிட வேண்டும் .மின் இணைப்புகளை கண்டிப்பாக இயக்கக்கூடாது.முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது சாதனம் இயங்கிக்கொண்டிருந்தால் அதனை அணைக்க முயலக்கூடாது.காஸ் கசிவு சமயத்தில் எந்த சுவிட்சுகளையும் ஆன் செய்யவோ,ஏற்கனவே ஆன் செய்துள்ள சுவிட்சுகளை ஆப் செய்யவோ கூடாது.டியூப்களை குறித்த கால இடைவெளியில் மாற்றவும். மேலதிக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றிய தகவல்களுக்கு கிளிக் செய்க 


3.தண்ணீர் 

            
 தண்ணீரில் கூடவா ஆபத்து?ஆமாம்.இப்போது பெரும்பாலான வீடுகளில் தரைக்கு டைல்ஸ்,மார்பில்ஸ் பயன்படுத்துகிறோம்.இவற்றில் தண்ணீர் கொட்டி விட்டால் கண்ணுக்கு தெரியாது.வழுக்கும் வாய்ப்புகள் அதிகம்.தண்ணீர் கொட்டியவுடன் சுத்தம் செய்து விடுவது சாலச்சிறந்தது.அதே போல குளியலறையிலும் வழுக்காதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து சாலையில்


டூ வீலர்னா ஹெல்மெட்டும் ,கார்னா சீட் பெல்ட்டும் மறக்காம போட்டுக்கங்க.பஸ்ல போறீங்களா புட்போர்ட் வேணாமே.(பீக் அவர்ல கொஞ்சம் கஷ்டம்தான்).நாமாக வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறும்,நிலை தடுமாற வாய்ப்புள்ள சில தருணங்கள்-கண்ணில் தூசி விழுவது,தும்மல் வருவது,சாலையில் மிகப்பெரிய எதிரி திடீரென குறுக்கிடும் நாய்கள்,எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ அப்டிங்கற மாதிரி,எந்த சந்துல இருந்து எந்த நாய் வரும்னு தெரியாது.எதிர்பாராத நேரத்தில் எங்கிருந்தோ விருட்டென ஓடிவந்து திகிலூட்டும்.வண்டியில் மோதவில்லை என்றாலும் பதற்றத்தில் நாம் நிலை தடுமாற வாய்ப்பு அதிகம்.எனவே எந்த இடையூறு வந்தாலும் சமாளிக்க தகுந்த,உடனே வாகனத்தை கட்டுக்குள் கொண்டுவர ஏதுவான வேகத்தில் எப்போதுமே பயணம் செய்வது வரும் முன் காக்க உதவும்.இன்னுமோர் முக்கியமான பிரச்சினை இரவுப்பயணங்களில் முகப்புவிளக்கால் ஏற்படும் கண் கூச்சம்.கூடுமானவரை எதிர் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கை டிம் செய்ய சிக்னல் கொடுக்கவும்.பெரும்பாலான பெரிய வாகன ஓட்டிகள் விளக்கை டிம் செய்வதில்லை,நாம கொஞ்சம் நிதானிச்சு போக வேண்டியதுதான்.


பணி புரியும் & மக்கள் கூடும் இடங்கள்


பணி புரியும் இடங்களில் செய்யும் பணிக்கு ஏற்ப பாதுகாப்பு சாதனங்களை (Personal ProtectiveEquipments)தயக்கமின்றி உபயோகப்படுத்த வேண்டும்.பணிக்கு ,உடலுக்கு இடையூறாக பாதுகாப்பு சாதனங்களை ஒரு போதும் நினைக்கக்கூடாது.நாம் பணி புரியும் இடங்களிலும்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அவசரகாலத்தில் பின் பற்றவேண்டியவை பற்றி அடிக்கடி ஒத்திகை( mock drill) செய்து பார்க்கலாம்.இந்த இடங்களில் இருக்கக்கூடிய அவசர காலத்தில் பயன்படுத்தும் சாதனங்களை இயக்க கற்றுக்கொள்ளவேண்டும்.fire extingusher,fire hose போன்றவை.மேலும் அவைகளை அவசர காலங்களில் எடுத்து பயன்படுத்தும்வகையிலும் ,சுலபமாக அணுக முடிந்த  இடங்களில் வைக்க வேண்டும்.( சென்னையில் ஒரு தியேட்டரில் fire extingusher ஏணி போட்டு எடுக்கும் உயரத்தில் இருந்ததை பார்த்தேன் ). ........


ஒரு நாள் வாழ்க்கையில் இவ்வளவு விசயங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டியிருக்கிறது.எனவே பாதுகாப்பு உணர்வை நமக்குள் எப்போதும் தூங்க வைக்காமல் விழிப்புடன் இருக்க வைப்போம்.நலமுடன் வாழ்வோம்.நல்லா இருப்போம்,நல்லா இருப்போம் ,எல்லோரும் நல்லா இருப்போம்.

உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு குறித்த தகவல்களைப்பகிரவும்.
மேலும் வாசிக்க "பாதுகாப்பு உணர்வு எப்போ வேணும்?"

Tuesday, March 27, 2012

ஒகேனக்கல் விசிட்-ரைட்டு கர்நாடகாவாம்,லெப்ட் தமிழ்நாடாம்



 பதிவர் சங்க வேண்டுகோளை ஏற்று எனது ஒகேனக்கல் விசிட் பற்றிய கடந்த பதிவின் தொடர்ச்சி.,

பரிசலுடன் அருவிக்குள் போலாமா என பரிசல்காரர் கேட்டதும் என்ன அருவிக்குள்லையா என்ற எனது அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் போலாம் ரைட் என நண்பர்கள் சொன்னதால் அருவிக்குள் சில நொடிகளில் புகுந்தது பரிசல்.வேகமாக சென்று விட்டதால் மொபைல்,கேமிராவை பாதுகாப்பாக வைப்பதற்குள் கொஞ்சமாக நனைந்து விட்டது.நல்லவேளையாக ஒன்றும் ஆகவில்லை.
                            [ கேப்டன்னாலே தண்ணில சும்மா பூந்து விளையாடுறாங்க ]     
அப்புறம் பரிசலை பம்பரம் போல கரகரவென சுத்திவிட்டார்.தலை சுற்ற ஆரம்பிப்பதற்குள் நிறுத்திவிட்டதால் தலை தப்பியது.என் நண்பன் ஒருவனுக்கு துடுப்பு போடும் ஆவல் வர பரிசல் காரரிடம் துடுப்பு வாங்கி போட்டுப்பார்க்க அது கர்நாடகா பார்டர் பக்கம் போனது,ஆமாங்க அங்கே லெப்ட் பாறை தமிழ்நாடாம்,ரைட்டு பாறை கர்நாடகாவாம்.சொன்னாங்க.ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்குன்னு சொல்லி துடுப்பை வாங்கி பரிசல் கேப்டனிடமே கொடுத்தோம்.
                     [தம்பி அவங்களுக்கும் நமக்கு வாய்க்கா தகராறு -வண்டிய திருப்பு]                   

பரிசல் போடுவது கொஞ்சம் கடினமான வேலைதான்.இடப்பக்கம் இரண்டுமுறை,வலப்பக்கம் இரண்டுமுறை துடுப்பை பிடித்திருக்கும் முறையை மாற்றி மாற்றி போட்டால்தான் பரிசல் சொன்ன பேச்சு கேக்குமாம்.சுமார் நானூறு பரிசல்கள் இருக்கிறதாம் ஒகேனக்கலில்.ஒரு நாளைக்கு இருநூறு பேரும் அடுத்த நாளைக்கு அடுத்த இருநூறு பேரும் மாறி மாறி பணி புரிவார்களாம்.சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு மூன்று ட்ரிப் கிடைக்குமாம்,மற்ற நேரங்களில் ஒன்று கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள்.ஒரு ட்ரிப்க்கு 200 ரூபாய்தான் கிடைக்கும் என்றார் எங்கள் பரிசல்காரர்.இதைதான் நம்ப முடியவில்லை நாங்கள் மட்டுமே 800ரூபாய் கொடுத்தோம்.அப்ப மீதி காசு எங்கே போகிறது?அது போக டிப்ஸ் வேறு கேட்கிறார்கள். 



            
அருவிகளில் இருந்து சமவெளியில் தண்ணீர் ஓடு ஒரு இடத்திற்கு போய் இறக்கிவிட்டுட்டு போய் குளிச்சுட்டு வாங்க வெயிட் பண்றேன்னு சொல்லிட்டார் பரிசல் கேப்டன்.அதுக்கப்புறம் தண்ணியை கண்ட ............களாட்டம் ஆட்டம் போட தயாரானோம்.ஹலோ,ஹலோ முதலைகள்னு சொல்ல வந்தேன்,நீங்க வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க.தண்ணியில கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் செம ஆட்டம்.ஒரு வருசத்துக்கு சேத்து குளிச்சாச்சு.உடம்பெல்லாம் ஊரிப்போகும் அளவுக்கு தண்ணியில இருந்தாச்சு,இதுக்கு மேல இருந்தா சின்ன கல் பட்டாகூட காயம் ஆகிடும் அந்த அளவுக்கு கும்மாளம் போட்டுட்டு கரையேறினோம்.திரும்பவும் பரிசலில் ஏறி ஏறின இடத்தில் இறங்கினோம்.
   [ஏண்டா இந்த தண்ணி கடலுக்குதான போகுது அது மட்டும் ஏன் உப்பா இருக்கு]

அதற்குள் வாங்கிக்கொடுத்திருந்த மீன் வறுவலாகவும்,குழம்பாகவும் உருவெடுத்திருந்தது.தண்ணீரில் போட்ட ஆட்டத்தால் செம பசி.சமைக்கும் இடத்துக்கு அருகில் சாப்பிட ஒதுக்கப்பட்டுள்ள இடம் இன்னும் கொஞ்சம்,இல்லை இல்லை நிறையவே பராமரிக்கலாம்.அதற்கு நுழைவுக்கட்டணம் ஐந்து ரூபாய் வேறு.நான் சைவ பட்சினி என்பதால் எனக்கு காரகுழம்பும்,ரசமும்.வாங்கி வந்த தயிர் பாக்கெட்டை நமது மூத்த மூதாதையார் ஒருவர் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். தயிர் போச்சே என நொந்து கொண்டு சாப்பிட்டோம்.ஐந்து பேர் சாப்பிட்டதற்கு மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட 700 ரூபாய். 
                                               
                    [அட மீன் செத்தா கருவாடு...சாரி வறுவல் ]


சாப்பிட்டு விட்டு மெயின் அருவி வியூ பாயிண்ட்கு போனோம்.அதற்கு கட்டணம் ஐந்து ரூபாய்.அங்கே சில,ஸ்டில்ஸ் எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் சுற்றினோம்.அதன் பிறகு களைத்து போய் அறைக்கு திரும்பினோம்.காலையில் எழுந்து அவரவர் பேருந்துகளை பிடித்து கிளம்பினோம்.

          [நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது ]
               
சொல்ல(வேண்டிய) மறந்த சில விஷயங்கள்

ரோடு முழுக்க நிறைய மாடுகள் மேய்கின்றன.யாரையும் எதுவும் செய்வதில்லை என்றாலும் பார்த்தாலே பயத்தை வரவைக்கின்றன.போதாதற்கு,காகித ,பிளாஸ்டிக் கப்புகளை லபக்கென்று விழுங்குகின்றன.
                                      
                                 
    [ இந்தகோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் ]


உ.பா.பிரியர்கள் கவனத்திற்கு-ஒகேனக்கலில் டாஸ்மாக் கிடையாது.வெளியில் இருந்து எடுத்து வருபவர்களையும் அனுமதிப்பதில்லையாம்.ஆனால் கள்ளச்சந்தையில் விற்பனை அமோகமாக நடக்கிறது.


இந்த சமயங்களில் வெயில் ஜாஸ்தியாக இருக்கிறது.தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் சுரீர் என்கிறது.டிசம்பரில் நன்றாக இருக்குமாம்.

அங்கிருந்து ஒரு கி.மீ.தொலைவில் முதலைப்பண்ணை ஒன்று இருக்கிறது.நாங்கள் போகவில்லை.நேரமிருந்தால் அதையும் ஒரு விசிட் அடிக்கலாம்.

ஒருநாள் போய் ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு வரலாம் ஒரு மீடியம் பட்ஜெட்டில்...


மேலும் வாசிக்க "ஒகேனக்கல் விசிட்-ரைட்டு கர்நாடகாவாம்,லெப்ட் தமிழ்நாடாம்"