Friday, April 27, 2012

தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்

அப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்?ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒட்டு மொத்தமா கேக்குறது கேக்குது,
விஷயம் என்னன்னா........

                                   

சொன்னா சாபம் எல்லாம் விடக்கூடாது..........



காது வழியா புகை விடக்கூடாது.........



வயித்தெரிச்சல் குறைய ஜெலுசில் வேணும்னு போன் பண்ணி தொந்தரவு கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க சொல்றேன்,,,,,,


விசயத்தை கேள்விப்பட்டு வயித்தெரிச்சலை போக்கனும்னு ஃபயர் சர்வீஸ்லாம் கூப்டு தொந்தரவு எல்லாம் பண்ணக்கூடாது,,,,,



என்ன சொல்லுடா வெண்ணையா??



இதுக்கு மேல பில்ட் அப் குடுத்தா flow ல கெட்ட வார்தைல்லாம் வரும்னு நினைக்குறேன் ,,,,,



சரி அது என்னானா மகாஜனங்களே,பாண்டிச்சேரில பவர் கட் கிடையாதுங்கோ................


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விஷயம் என்னன்னா நேத்து(மட்டும்) நைட்ல ஒரு ரெண்டு மணில இருந்து
காலைல வரைக்கும் பவர் கட் ஆகிடுச்சு,அந்த நேரத்தில் வியர்வையில் புரள்கையில் கண நேரத்தில் என் கபாலத்தில் உதித்ததுதான் இந்த பதிவுக்கான கரு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேலும் வாசிக்க "தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்"

Thursday, April 19, 2012

கவுண்டமணி செந்திலும் மூணு படமும்



நம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிருக்க செந்தில் வருகிறார்.,

செந்தில்- வாங்கண்ணே!எங்கண்ணே ரொம்ப நாளா காணோம் எங்கண்ணே போனீங்க?

கவுண்டர்- அது வந்துடா சப்போட்டா தலையா ஜனாதிபதி தேர்தல் வரப்போகுதில்ல அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ண டெல்லி போயிருந்தேன்,விசயத்த சொல்லுடா வெளக்கெண்ண .,

செந்தில்-டெல்லிக்கு போனிங்களே நாட்டு நடப்பெல்லாம் எப்புடிண்ணே  இருக்கு?


கவுண்டர்-ஏண்டா போண்டா வாயா டெல்லி மட்டும் தான் நாடா?ஏன் நாம இருக்கற தமிழ்நாடு எல்லாம் நாடு இல்லையா?டெல்லிக்கு போனாதான் நாட்டு நடப்பு தெரியுமா? டீக்கடைல உக்காந்து தினத்தந்தி படிச்சாலே நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கலாம்டா.,என்னைக்குத்தான் திருந்தப்போறிங்களோ so sad.,so sad.

செந்தில் – என்னண்ணே சோ சோகமா இருக்காரா?எதுக்குண்ணே?

கவுண்டர் – அடங்கோ,டே,ஆன்ட்ராய்டு மண்டையா இதுக்குத்தான் நான் இங்கிலீஷ் பேசுறது இல்ல.

செந்தில் – சரி விடுங்கண்ணே,பத்தாவது பெயில் ஆனா இப்படித்தான் பேசத்தோணும், ஏதாவது படம் பாத்தீங்கலான்னே,

கவுண்டர் – ஆமாடா மைக்ரோமாக்ஸ் வாயா,இப்பல்லாம் எவனும் பாக்குற மாதிரி படம் எடுக்குறதில்ல,படம் பாத்தாலே நமக்கு டங்ஷன் ஆகிடுது,அதுக்காகவே படமே பாக்குறதில்லனு முடிவு பண்ணியிருந்தேன்,சரி போனா போகுதுன்னு நேத்துதான் மூணு படம் பாத்தேன்.

செந்தில் – பெரிய ஆள்ணே நீங்க.,ரொம்ப நாளா படம் பாக்காம இருந்துட்டு ஒரே நாள்ல மூணு படம் பாத்துட்டீங்க,


கவுண்டர் – அடங்கொன்னியா!அடே,அர ட்ரவுசர் பையா,மூணு படம் பாக்கலடா,ஒரு படம் பாத்ததுக்கே டர்ஸ்சாகிட்டேன்,இன்னும் மூணு படம் பாத்தா வடக்குப்பட்டி ராமசாமிக்கிட்ட குடுத்த பணம் மாதிரி ஊஊ ஊ ஊ.....தான்.

செந்தில் – சரிண்ணே மூணு படத்துலயும் யாரு ஹீரோ,யாரு ஹீரோயின்.

கவுண்டர் – அது வந்துடா ,நம்ம சூப்பர் ஸ்டாரோட மருமகப்பிள்ளை ஹீரோ,நம்ம உலக நாயகனோட புதல்விதான் ஈரோயினி,டைரக்டர் யாருன்னு கேட்டே அசந்தே போயிடுவடா தர்பூஸ் தலையா,நம்ம சூப்பர்ஸ்டாரோட மருமகனோட ஓய்பு தான் இந்த படத்தோட டைரக்டரு.


செந்தில் – அதெல்லாம் சரிண்ணே,மத்த ரெண்டு படத்தோட ஈரோ,ஈரோயின் யாருண்ணே?டைரக்டர் யாரு அவங்க வெவரம் பத்தி சொல்லுங்கண்ணே,

கவுண்டர் – என்னடா கேட்டே?

செந்தில் – வெவரம்,வெவரம்.

கவுண்டர் – டேய்,ஐ பாட் மூக்கா, இன்னிக்கு என்கிட்டே செம மாத்து வாங்காம போக மாட்ட போலிருக்கு,அதுக்குள்ளே ஓடிப்போயிடு.டே,சத்தியமா நான் பாத்தது ஓரே ஒரு படம்தாண்டா.

செந்தில் – அட போங்கண்ணே – இப்படித்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னால ரெண்டு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு என்னை ஏமாத்துணனிங்க,இப்போ மூணு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு எமாத்துறீங்க,போங்கண்ணே


கவுண்டர்- -ஆமா இவரு பெரிய கன்னிப்பொண்ணு,காதலிச்சுட்டு,கர்ப்பமாக்கிட்டு ஏமாத்துறாங்க,போடா டேய்.

செந்தில் – அந்த ரெண்டு படத்துலயும் ஒரு படத்துல மாதவன்- அனுஷ்கா,இன்னொரு படத்துல மாதவன் – ரீமா சென் நடிச்சாங்கன்னு சொன்னீங்க,இந்த மூணு படத்துல யாறாருனு சொல்லுங்கண்ணே,இல்லேன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடும்ணே.


கவுண்டர் – அடேய்,உன்மண்டைய நானே ஓடச்சுடுவேன்,டே சத்தியமா நான் பாத்தது ஒரே ஒரு படம் தாண்டா.


செந்தில் – அட போங்கண்ணே,நான் அந்த பழம்தான் இந்த பழம்னு சொன்னப்போ உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சு,எப்படி டென்சன் ஆனீங்க,இப்போ நீங்க அந்தப்படம் தான் இந்தப்படம்னு சொல்றீங்க.


கவுண்டர் – டேய் முலாம்பழ கண்ணா,எதுக்கும் எதுக்கும்டா கனெக்சன் குடுக்குற,ரொம்பநாளாச்சே பாவம் விட்டுடலாம்னு பாத்தா விட மாட்ட போலிருக்கு.இனிமே பேசிப்பிரயோஜனம் இல்ல ஸ்டார்ட் மியூசிக்.....


மேலும் வாசிக்க "கவுண்டமணி செந்திலும் மூணு படமும்"

Wednesday, April 11, 2012

மனிதனும் கடவுளாகலாம்


             
                                                  

மனிதா...
நீயும் கடவுளாகலாம் !
உன் விழிகளுக்கு
சாகாவரம் அளிப்பதனால் !!


                                 [ photo-thanks to my friend madhesh]
மீள்வு
மேலும் வாசிக்க "மனிதனும் கடவுளாகலாம்"

Monday, April 9, 2012

பல"சரக்கு"கடை-6(09/04/12)


சம்சாரம் அது மின்சாரம்



அது அப்போ மின்சாரமே இப்போ மின்சாரம்.மின்சாரம் இருக்கும் போது தான் ஷாக் அடிக்கும்,இப்போ இல்லாமலே ஷாக் அடிக்கப் போகுது.மக்கள் எல்லாம் அம்மா,தாயே எங்களுக்கு இலவசம் எதுவும் வேணாம்னு கை எடுத்துக்கும்பிடும் வரை அம்மாவின் அதிரடி விலைஉயர்வு அறிவிப்பு தொடரும் என தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடிவேலு பாணியில் சொல்லனும்னா ஆணியே புடுங்க வேணாம்னு எல்லோரும் பேசிக்குறாங்களாம்.

வாக்கிங்கா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தி.மு.க வினருக்கும் நடைப்பயிற்சிக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தமோ தெரியல.ஆலடி அருணா,கு.ப.கிருஷ்ணன் வரிசைல இப்போ திருச்சி ராமஜெயம்.இனி தி.மு.க. பிரமுகர்கள் நடைப்பெயற்சி செய்ய தயங்குவார்கள்.

மல்யுத்த மகாராணி



ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் இதுவரை மகளிர் பிரிவில் பங்கேற்றதில்லை.தந்த குறையை போக்கியிருக்கிறார் சகோதரி.கீதா.இதற்கான தகுதிச்சுற்றில் தங்கம் வென்று தனது ஒலிம்பிக் பயணத்திற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளார்.அவரது பயணம் வெற்றிகரமாக அமைந்து பதக்கப்பட்டியலில் இவரது பங்கு இடம்பெற வாழ்த்துவோம்.

கொசுவர்த்தி சுருள்

துவங்கியாச்சு பத்தாவதுக்கு பரிட்சை.நான் முதல் முதல்ல பாஸ்போர்ட் போட்டோ எடுத்தது பத்தாவது பப்ளிக் எக்ஸாம் ஹால்டிக்கெட்டுக்காக தான்.அந்த நினைவுகள் வந்து போகுது.அதிலும் ஒரு நண்பன் சாக்பீஸ் தூளை திருநீறாக வைத்துக்கொண்டது கொசுவர்த்தி சுருள் சுழன்றதில் வந்து போனது.அப்புறம் ஏதோ IPLலாம்,அதுவும் பத்தாவது பரிட்சை தொடங்குன அன்னிக்கே தொடங்கியிருக்காம்..

புரட்சிப்போராட்டம்



மக்களையெல்லாம் புரட்சிப்போராட்டம் நடத்தச்சொல்லி விழிப்புணர்வு(?)போராட்டம் நடத்தி வந்த நகைக்கடை அதிபர்களையே புரட்சிப்போராட்டம் நடத்த வைத்திருக்கிறது மத்திய அரசு.புரட்சி(!)போராட்டத்தின் பலனாக அரசு கொஞ்சம் பணிந்து வந்திருக்கிறதாம்,புரட்சியும் கொஞ்சம் தணிந்திருக்கிறது.

நம்ம தலைவர் பாணியில் ஒரு ட்வீட்

                    [ஒரு பூ பத்தாதே சகோதரி]

உயிர் தோழியே,உடன் பிறவா சகோதரியே,நீங்கள் என்னை வீட்டை விட்டு தூக்கிப்போட்டாலும் நான் உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பேன்,நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்.


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-6(09/04/12)"