Sunday, April 5, 2020

மாஸ்க் மட்டுமே போதுமா?

நிறைய இடத்தில இப்ப போலீஸ்காரங்க என்ன பண்றாங்கன்னா வண்டியில்  வர்றவங்கள நிறுத்தி மாஸ்க் எங்க மாஸ்க் எங்கன்னு தான் கேக்குறாங்க.

 இதனால நிறைய மக்கள் என்ன மாஸ்க் போட்டுட்டு போனாலே போதும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிச்சுக்கலாம், அப்படின்னு நெனச்சுக்கிட்டு விதவிதமா மாஸ்க் போட்டுக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

 வைரஸ் தொற்று இருக்கிறவங்க மாஸ்க் போட்டு இருந்தா  அவங்ககிட்ட இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் பரவாது அப்படிங்கறது என்னமோ உண்மைதான். ஆனா நம்மில் பல பேருக்கு  இந்த மாஸ்க்கை இப்படி பயன்படுதுவதென  தெரியிறதில்ல.

 நிறைய மாஸ்க் வகைகள் இருக்கு.
 ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கெப்பாசிட்டி இருக்கு. அதாவது சில மணிநேரங்கள் மட்டுமே வைரஸ் கடத்தலை இந்த மாஸ்க்குகள் தவிர்க்கும்.


 இப்போ பல பேர் என்ன பண்ணிட்டு இருக்காங்க? ஒரே மாஸ்க்கை நாள் பூரா பயன்படுத்திட்டு இருக்காங்க. கிராமங்கள்ல நிலைமை இன்னும் மோசம் ஒரே மாஸ்க்கை நாலஞ்சு நாளைக்கு எல்லாம் பயன்படுத்திக்கொண்டே இருக்காங்க

மாஸ்க்கை கையால் வெளிப்பக்கம் தொடுவதே ஆபத்து ,நிறைய பேர் மாஸ்க்கை கழட்டி கழட்டி மறுபடியும் மறுபடியும் பயன்படுத்திக்கொண்டே இருக்காங்க.

 So மாஸ்க் மட்டும் மாட்டிகிட்டு வெளியில போயிட்டு வர்றது, மாஸ்க் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அதை பயன்படுத்துவது ரொம்ப ஆபத்தானது.

  அத்தியாவசிய தேவைகளுக்காக  வெளியே போகும் போது இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்க இருக்கும் வழிகள்
 சோசியல் டிஸ்டன்ஸ் அப்புறம் கை கழுவுதல், குறிப்பா வெளியே சுத்துற நேரங்கள்ல கை கழுவுவதற்கு முன்னால் முகத்தை தொடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

 போலீஸ்காரர்களும்  தனியாக நடந்து வர்றவங்க அப்புறம் வண்டியில் வர்றவங்க இவங்களையெல்லாம் மாஸ்க் எங்கே என்று கேட்க அவன் கறிக்கடையில், காய் கடையில, சூப்பர் மார்க்கெட்டில், மளிகை கடையில இந்த மாதிரி இடங்கள்ல கூட்டங்கூட்டமாக நிக்கிற மக்கள்கிட்ட சோசியல் டிஸ்டன்ஸிங் பற்றி விழிப்புணர்வு கொடுத்து அனுப்பவும்.ரோட்ல தனியே நடந்து வர்றவங்க வண்டில வர்றவங்கள விட இந்த மாதிரி கூட்டமா நிக்கிறவங்க தான் ரொம்ப ஆபத்தானவங்க.

 எச்சரிக்கை மக்களே மாஸ்க் மட்டுமே  உங்களை பாதுகாக்காது.
Keep distance and Wash hands frequently. This is the only way to protect ourselves.

#social_distance
#hand_wash
மேலும் வாசிக்க "மாஸ்க் மட்டுமே போதுமா?"

Wednesday, February 21, 2018

மணக்கும் டிஜிட்டல் இந்தியா


என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம்.

அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தி வந்த பழைய நெட்வொர்க்களில்(Airtel,aircel,bsnl etc) ஒன்று தான் primary number.

அதில் aircel சேவை இரு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் card paymentகளுக்கு aircelஐ OTP பெறும் option ஆக வைத்திருப்பவர்களது நிலை?

அது போகட்டும்,சில வங்கிகளின் customer care அழைக்க வங்கியில் பதிவு செய்த எண்ணிலிருந்து தான் அழைக்க வேண்டும்.அவர்களது வங்கிச்சேவை இந்த நாட்களில்?

ஓக்கே,இனி aircel செயல்படவே போவதில்லையெனில்,மொபைல் எண்  கட்டாயமாக்கப்பட்ட  சமையல் சிலிண்டர் பதிவு செய்ய,ஆதாரில் திருத்தம் செய்ய போன்ற சேவைகளின் நிலைமை?


என்ன அங்கே எல்லையில் இராணுவ வீரர்களா?
போதும்டா யப்பா 😠
மேலும் வாசிக்க "மணக்கும் டிஜிட்டல் இந்தியா"

Friday, August 21, 2015

க்ளிக் க்ளிக் க்ளிக்

"க்ளிக்" எழுத்து நாலு வடிலுவில் இப்படித்தான் சொல்லமுடியும்,உண்மையில் சப்தங்களை அப்படியே எழுதிட இயலாது.
சில சப்தங்களுக்கு போதையூட்டும் வல்லமையுண்டு.
கேமராவிலிருந்து வரும் சப்தமும் போதைதான்.

ஒரு போட்டோ எடுத்துட்டு வியூ பாக்கும் போது புதுப்பேட்டைல வர்ற மாதிரி ஏய்ய்ய்.......ஏய்ய்ய்ய்ய் நாந்தான்........... நாந்தான் ., அப்படி இருக்கும்.
மொபைல் கேமிராவிலும்,basic model டிஜிட்டல் கேமிராவிலும் சும்மா க்ளிக் பண்ணிக்கொண்டு எனது புகைப்படக்கலைத்திறனை(?) வளர்துக்கொண்டிருந்தேன்.சர்வன் பிறந்த பிறகு அவனுக்காகவே அவனுடன் சேர்ந்து எனது புகைப்பட ஆர்வமும்,திறமையும் வளரவேண்டுமென ஒரு DSஞ்சாLR கேமிரா வாங்கப்பட்டது.


நிச்சயம் அவன் வளந்துடுவான் 
எனது புகைப்பட ஆர்வமும்,திறமையும்?? 
காத்திருங்க...........(சன் டிவி சினிமா செய்திகள்ல வர்ற பொண்ணு ஸ்டைலில்படிங்க  )

கேமிரா என் கைக்கு வந்தது சர்வன் பிரசவித்த நேரம் போலவே தவிப்பான தருணம்.
சர்வனின் முதல் பிறந்தநாளை புது கேமிராவில் பதிவு செய்யவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கேமிரா மாடல்,விலைஆன்லைனில் வாங்குவதா,ஷோ ரூமிலா என பல விவாதங்கள்,பரிந்துரைகள் எல்லாம் முடிந்து இறுதியில் "CANON EOS 1200D" மாடல் ஆன்லைனில் ஷோரூமை விட கிட்டத்தட்ட 2500ரூபாய் குறைவாகக்கிடைத்தது.ஆனால் தலைவரின் பிறந்தநாளைக்கு இருந்ததோ ஐந்து நாட்களே,ஆர்டர் செய்தவுடன் estimated delivery date பிறந்தநாளை விட ரெண்டு நாட்கள் கழித்து இருந்தது.

ப்ரியாவுக்கு கேமிராவுக்கு இவ்வளவு செலவு செய்வது அவ்வளவாக விருப்பமில்லை,ஒரு வழியாக  சமாதானப்படுத்தி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்திருந்தேன்.இப்போ பிறந்தநாளைக்கு கேமிரா கிடைப்பது போல தெரியவில்லை என்ற தகவலை அவளிடம் சொல்வதற்கான மனோதிடம் அப்போதைக்கு என்னிடம் இல்லை.

ஆனால் நம்பினேன்,சர்வனின் பிறந்தநாளன்று கேமிரா கிடைத்துவிடுமென நம்பினேன்.எப்படியென்றால் உள்ளுக்குள் பட்சி சொன்னது"பட்சி'பட்சி"அது போக INSTINCT சொன்னது ,ஆமாம் Its "GOKUL INSTINCT".
உள்ளுக்குள்ள "கெதக்"னு இருந்தாலும் வெளிய 'கெத்'தாக காட்டிக்கொண்டேன்.

இடையே கஸ்டமர்கேர்க்கு மெயில் ஒன்றை தட்டினேன்."இந்த ஆர்டர் எனக்கு முக்கியமானது,இது எனக்கு உங்கள் estimated delivery dateஐ விட ரெண்டு நாளைக்கு முன்னதாக தேவைப்படுகிறதுetc,etc போட்டு ,கிட்டத்தட்ட சிலர் பரிட்சை  பேப்பரில் எழுதுவார்களே "என் வாழ்கையே உங்க கையில தான் இருக்கு எப்படியாவது எனக்கு பாஸ்மார்க் போட்டுடுங்க"னு.கிட்டத்தட்ட அப்படியான மெயில் அது.

ஆன்லைனில் ஆர்டரை  நாலு  நாட்களாக ட்ராக் செய்துகொண்டே இருந்தேன்.
பிறந்தநாளைக்கு முதல் நாளானது."என்ன கேமிரா இன்னும் காணோம்?"
இல்லம்மா ட்ராக் பண்ணிட்டு இருக்கேன் நாளைக்கு காலைல வந்துடும்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.முதல் நாள் இரவு ட்ராக் செய்து பார்க்கையில் பார்சல் பாண்டியை வந்தடைந்தது தெரிந்தது.பெருமூச்சிலும் பெருமூச்சு அப்போதுதான் வந்தது.ஆனாலும் இந்த கொரியர் பாய்ஸை நம்ப முடியாது நல்லா வைச்சு செய்வாங்களே.அதனால கொரியர் கஸ்டமர்கேர்க்கு தொலைபேசி "நானே உங்க இடத்துல வந்து என் பார்சலை வாங்கிக்குறேன் இடம் எங்கேன்னு சொல்லுங்க"அப்படின்னேன்.அவங்களோ இடத்தையெல்லாம் சொல்ல முடியாது சார் உங்க இடத்துக்கே வரும் அப்படின்னாங்க,சரிங்க இன்னைக்கு கிடைக்குமா அப்படின்னு கேட்டா தெரியல சார் அது எல்லா ப்ராசஸூம் ,முடிஞ்சா தான் தெரியும் அப்படின்னுடாங்க.என்னடா இது GOKUL INSTINCTக்கு வந்த  சோதனைன்னு நினைச்சுகிட்டு,பிறந்தநாளன்று  ஆபீஸ்ல முக்கியமான வேளை இருக்கு போயிட்டு பத்து மணிக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.(அப்பாடா கொஞ்ச நேரம் எஸ்கேப்)

ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி மதியம் பார்சல் வந்துடுமாம்னு சும்மக்காசும் சொல்லிட்டேன்.பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தா இராம.நாராயணன் படத்தில் வில்லனை பழி வாங்கும் நேரத்தில் வரும்உக்கிர அம்மன் சாயலில் அம்மணி.
"உன்னை நினைத்து சார்லி- பேட்டரி போடல?
சிங்க முத்து-போடல"சீன் போல என்னம்மா இன்னும் பார்சல் வரல என கேட்டுக்கொண்டே நுழைந்தேன்.ஆபத்பாந்தவனாய் ஒரு அழைப்பு வந்தது.

"ம்,கோகுல் தான் சொல்லுங்க,...........
............................
சரி,இப்போ எங்கே இருக்கீங்க?...........
............................
நான் வீட்ல தான் இருக்கேன்.வாங்க வாங்கிக்கிறேன்.பக்கமா வந்து கால் பண்ணுங்க."ஓகே.

"என்னங்க கொரியர்ல இருந்தா போன்,பார்சல் வந்துடுச்சா?"
ஆ...மாம்.
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் அதே அழைப்பு."வீட்டுக்கு வெளியே நிக்குறேன் வாங்க"பேசிவிட்டு மனைவிடம் எம்ப்டி சிலிண்டர் எங்க இருக்குன்னு கேட்டேன்.இப்ப எதுக்குங்க எம்ப்டி சிளிண்டர்னு கேட்டா.இல்லம்மா வந்தது கொரியர் கால் இல்ல முந்தாநேத்து புக் பண்ண கியாஸ் சிலிண்டர்னு சொல்ல,என் நிலைமை உங்கள் கற்பனைக்கு.

மற்றொரு அரைமணி கழித்து இன்னுமோர் அழைப்பு இந்த முறை கண்டிப்பாக கொரியர் காலாகத்தான் இருக்குமென சும்மா இல்லாமல் இந்த INSTINCT வேறு சொல்லியது."ஹலோ............................,"

இந்த முறை அவள் நம்பவில்லை,அடுத்த பத்தே நிமிடத்தில் வந்துசேர்ந்தது கொரியர் வண்டி.கையெடுத்து கும்பிடாத குறையாக வாங்கிக்கொண்டேன்.சர்வன் பிறந்து என்கையில் தவழ்ந்த தருணம் போல சரியாக அவன் பிறந்தநாளன்றே அந்த அனுபவம் கிடைத்தது.கேமிராக்குழந்தை.
 
 இப்போது என் கையில்.இப்போ இன்னுமொரு பிரச்சினை MANUAL எல்லாம் படிக்க நேரமில்லை DSLR அது நாள் வரை தொட்டுப்பார்த்தது கூட கிடையாது.எப்படி படம் எடுக்கப்போகிறோம் என்ற திகில் எட்டிப்பார்த்தது.சொல்லப்போனால் நானும் போட்டோவில் வர வேண்டும் அல்லவா அப்படியானால் சில போட்டோக்களை எடுக்க யாருக்காவது சொல்லி வேற தரவேண்டும் (எப்படி சிக்கி இருந்தேன் பாத்தீங்களா?)போதாததற்கு ஏற்கனவே இருந்தா பேசிக் மாடல் டிஜிடல் காமிராவும் இயங்கவில்லை.
 
புது பேட்டரியை சார்ஜ் போட்டுட்டு ,சரி  இருக்கவே இருக்கு மொபைல் நிலைமை கைமீறிப்போனால் மொபைல்ல பாத்துக்கலாம்னு வேலையை பாக்க ஆரம்பிச்சாச்சு.(வேற வழி).சார்ஜ் ஆன பேட்டரியை கேமிராவில் பொருத்தி லென்சை கேமிரா மாட்டி முதல் போட்டோ எடுக்க போகஸ் செய்தால் திக் திக் சப்தத்தை என் செவி உணர்ந்தது.அந்த முதல் "க்ளிக்" சப்தம் 
ப்ப்ப்ப்பா.சிலிர்த்தே விட்டது.முதல் போட்டோ வியூவில் பார்க்க பொத்தானை அமுக்கும் போது கை நடுங்க துவங்கியது
 
.பார்த்தவுடன் எனக்கு நானே சொல்லிக்கொண்டது நீ பிறவிக்கலைஞன்டா.




 பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தேறியது.எனது விலா தப்பியது.




நட்புடன்,
ம.கோகுல்



மேலும் வாசிக்க "க்ளிக் க்ளிக் க்ளிக் "

Tuesday, December 23, 2014

தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!


தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி  பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வேற  கேப்பாங்க இல்ல). அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் அதி(பயங்கர) மேதாவிகளே.



நீங்கள்தான்  ரசிகர்களின்  கலைத்தாகத்தை தீர்க்கும் அமுதத்தை ,(அடிக்கடி சொல்லமாட்டேன் நீங்களே அவ்வப்போது இந்த பத்தியில எங்கெங்க தேவைப்படுதோ  போட்டுக்கங்க,எதையா? ஏன்யா என் வாயாலே சொல்ல வைக்குறிங்க?அதான் ,அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்)தரும் வல்லவர்கள்.
நீங்கள்தான்உங்கள் கலைப்படைப்பின் மூலம் துவண்டு கிடக்கும் ரசிகனோடதை தட்டி எழுப்புகிறீர்கள்,எதையா ?என்னய்யா உங்களோட? புத்துணர்ச்சியைத்தான்.
நீங்கள் தான் ரசிகனின் தேவையை உணர்ந்து  அவனுக்கு என்ன தேவையோ அதை அவனிடம்சரியாக கொண்டு போய் சேர்ப்பதில்  கை தேர்ந்தவர்கள்.
நீங்கள் தான் உங்கள் மூளையை மீண்டும் சொல்கிறேன் உங்கள் மூளையை கசக்கிபிழிந்து புதுப்புது பரிமாணங்களில்(பரிணாமங்களில் கூட )சினிமாவை ரசிகனிடம் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள்.
நீங்கள்தான் .......இன்னும் சொல்லிக்கொண்டே போலாம் போதும் கை வலிக்கிறது.(அதுமட்டுமல்ல ஒருநாளைக்கு நான்கைந்து பொய்கள் தான் சொல்வது வழக்கம்)


விசயத்துக்கு வருவோம்
நாங்கள் ரசிகர்களுக்காக படம் எடுக்கிறோம் அவர்கள் ரசிக்கிறார்கள்,ஆனால் இந்த இணையத்தில் எழுதுபவர்கள்தான் நொர நாட்டியம் பேசுகிறார்கள்,நொட்டம் சொல்கிறார்கள் என்கிறீர்கள்.சரிதான்

நீங்கள் சோறு தானே சாப்பிடுகிறீர்கள்?அய்யய்யோ கதை கெட்டுது,(அட உங்க கதை இல்லைய்யா,நான் சொல்ல வந்த கதை) நான் சொல்ல வந்ததின் அர்த்தம் அதுவல்ல.நீங்கள் உணவு உண்கிறீர்கள் தானே.உதாரணத்திற்கு உங்கள் மனைவி சமைத்ததை சப்புக்கொட்டி சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் அப்போது உங்கள் மனைவி நேற்று டிவியில் பார்த்த புது பதார்த்தமொன்றை,நானே புதுசா ஒரு ஐட்டம் ட்ரை பண்ணியிருக்கேன் (எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்)சாப்பிடுங்கன்னு வைக்குறாங்க,அதை சாப்பிட்டதும் உங்க முகம் இஞ்சி சாப்பிட்ட சிங்கம் மாதிரி ஆனாலும் வெளிக்காட்டிக்காம நல்லா இருக்கும்மா அப்படின்னுட்டு போயிடுவீங்க( இதுதான் நீங்க சொல்ற ரசிகர்களுக்காக படம் எடுக்குறோம் அவங்க ரசிக்குறாங்க).

இப்போ  நீங்க செம்ம பசியில போய் ஒரு  ஹோட்டல்ல எது ரெடியா இருக்கோ சீக்கிரம் கேட்டுட்டு இட்லி என்றதும் நாலு வாங்கி  சாப்பிடுறீங்க,பசியடங்கிய பின் மெனு கார்டை பார்த்து இருப்பதிலே விலையுயர்ந்த ஒண்ணை ஆர்டர் செஞ்சுட்டு காத்திருக்கீங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வந்த ஐட்டமோ அன்னைக்கு உங்க மனைவி செஞ்ச புது ஐட்டத்தை விட சுமாராதான் இருக்கு.என்ன உப்பு தான் கொஞ்சம் கூட(பயபுள்ள உங்க மூஞ்ச பாத்து என்ன நினைச்சுதோ தெரியல).இப்ப உங்க ரியாக்சன் எப்படி இருக்கும் அன்னைக்கு சாப்பிட்ட மாதிரி பொத்திக்கிட்டு சாப்பிட்டுட்டு வந்துடுவீங்களா?ஓட்டலாயா நடத்துறீங்க ஓட்டலுன்னு கலகலப்புல வர்ற ஆண்ட்டி ரேஞ்சுக்கு சவுண்டு விடமாட்டீங்க?

உங்க சத்தத்தை கேட்ட ஹோட்டல் சூப்பர்வைசர் வந்து பிரச்சினையை கேட்டுட்டு,"சாப்பிட இஷ்டமா இருந்தா சாப்பிடு இல்லன்னா திண்ணதுக்கு பில்லை கட்டுட்டு போயிட்டே இரு","அவனவன் எவ்ளோ கஷ்டப்பட்டு சமைக்கிறான்,ஒரு நாள் பூரா நெருப்புல நின்னு,அங்கங்க சூடு பட்டுக்கிட்டு புகையில,மசாலா நெடியில லோல் பட்டுக்கிட்டு புதுப்புது ஐட்டமா செஞ்சு குடுத்தா நல்லாயில்லயாம்ல,நல்லாயில்ல.நாலு இட்லி சாப்டவுடனே உன் பசி அடங்கிடுச்சுல்ல,அப்பவே எழுந்து போக வேண்டியது தானே.இந்த ஐட்டமே வெளிய இருக்க கையேந்திபவன்ல பாத்திரம் கழுவுறவரு சொல்லித்தந்த மெனுயா.இஷ்டமா இருந்தா திண்ணு இல்லன்னா போயிட்டே இரு"."எங்க சாப்பாட்டை சப்புக்கொட்டி சாப்பிட நிறைய ஆளுங்க இருக்காங்க அவங்களுக்குதான் நாங்க ஹோட்டல் நடத்துறோம்,போங்க சார்"


அவர் சொல்வது போல கஷ்டப்பட்டு சமைக்கும் ஒரே காரணத்திற்க்காக நல்லா இல்லன்னா கூட மூடிக்கிட்டு சாப்பிட்டுட்டு வரவா முடியும்.
அப்படித்தான் இருக்கிறது உங்கள் பிரசங்கமும்.

ஓகே ஆல்ரைட்.கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன் இணையத்தில் இயங்கும் திரைப்படரசிகர்கள் சார்பில்.
தலைப்பை ஒரு முறை வாசிக்க,
உங்களுக்கு விமர்சனத்தை தாங்கிக்கும் பக்குவம்(வக்கு என்றும் பொருள் கொள்ளலாம்)இல்லையெனில் இணையப்பக்கம் வராமல் மூடிக்கொண்டு இருக்கவும்,எதையா உங்களுக்கு ஓயாம விளக்கம் குடுக்கனுமாய்யா?உங்கள் லேப்டாப்பையும்,இன்ன பிறதையும்.என்ன இன்ன பிறதுன்னாவா ??ஷ்ஷ்ஷ்ஷ் பா,PCயையும் மொபைலையும்.கடைசியா வைத்திருப்பது டாட்


மேலும் வாசிக்க "தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!"

Wednesday, June 25, 2014

பல"சரக்கு"கடை 16- 26/06/2014

வணக்கம் நண்பர்களே!

                        தானாக ரீஸ்டார்ட் ஆகும் எனது PCயின் பிடிவாதத்தையும் மீறி வரும் பதிவு இது( தீர்வு தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும்).அது போக குட்டித்தலைவர்  கூடவே நிறைய நேரம் இருப்பதால்மொபைலில்  facebook-ல் சிலபல statusகளோடும்,FEEDLY APPல் பதிவுகளை மேய்வதொடும் இணைய தாகம் முடிந்து விடுகிறது.இப்போ தலைவர் ஊர்ல இருக்கார்.அதான் கேப்ல கடைய திறந்தாச்சு.
குப்புற கவிழ்ந்தாச்சு முன்னேற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
அவனுடைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

                                                                      சர்வன் :)
                                                                    
சென்ட்ரல் குண்டுவெடிப்பு & செக்அப்
   என்னா ஒரு ரெண்டு மாசம் ஆகியிருக்குமா?எல்லா சேனல்களும் வரிந்து கட்டிக்கொண்டு குண்டுவெடிப்பை தடுக்க  பாதுகாப்பு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்னல்லாம் ஓட்டை அப்படின்னு எல்லாம் பொளந்து கட்டினாங்க.பேட்டி கொடுத்த அதிகாரிகள், நம்ம பொது மக்களையும் சும்மா சொல்லக்கூடாது நல்லா கோ ஆப்பரேட் பண்ணாங்க.அந்த சம்பவத்துக்கு அப்புறம் விழுப்புரத்திலிருந்து சேலத்திற்கு இரண்டு முறையும்,சேலத்திலிருந்து விழுப்புரத்திற்கு ஒருமுறையும் ரயில் பயணம் வாய்த்தது.

எந்த ரயில் சந்திப்பிலும் சோதனை என்பது கமர்சியல் சினிமாவில் லாஜிக்கை பார்ப்பது போலிருந்தது.பயணத்திலும் அதே நிலைமைதான்,சரி யாரும் ரோந்து வரவில்லையே நாமாவது ஒரு ரவுண்டு போவோம் என போய் பார்த்ததில் சட்டம் ஒழுங்கு ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தது,பார்த்துவிட்டு வந்துவிட்டேன் சட்டம் ஒழுங்குடன் ஐக்கியமாக.


Survival of the fittest

  கொஞ்ச நாளைக்கு முன்பாக facebookல் இந்த தலைப்பு ஓடிக்கொண்டிருந்தது.என்னைக்கேட்டால் survival of the fittestக்கு ஏகச்சிறந்த (ஏன் ஆகச்சிறந்த தான் வரணுமா?இதுவும் இருந்துவிட்டுப்போகட்டும் விடுங்க) உதாரணம் புதுப்பேட்டை திரைப்படத்தை சொல்வேன்.

படத்தின் பல வசனங்கள் இதைத்தான் உணர்த்தும்.நிச்சயமாகவே ஏய்! நாந்தான் ,நாந்தான் அப்படி ஒரு ஃபீல் வரும் அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம்.படம் ஜெயா டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தவிர்த்து விடுங்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள்.


1/4பந்து அனுபவங்கள்

  மங்களபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி பள்ளி தான் கால்பந்து எனும் வஸ்துவை என் கண்ணில் காட்டியது.ஆறிலிருந்து எட்டுவரை வாரமிருமுறை வரும் உடற்கல்வி பீரியடில் கொஞ்ச நேர உடற்பயிற்சிக்கு பின்னர் போய் விளையாடுங்க என அனுப்பிவிடுவார்கள்.விளையாட எதுவும் தரமாட்டார்கள்.சும்மானாச்சுக்கும் மைதானத்தை சுத்தி சுத்தி வருவோம் கபடி சிலவேளை களைகட்டும்.ஒன்பதாவதிலிருந்து ஏதாவது விளையாட கொடுப்பார்கள் அது பெரும்பாலும் கால்பந்து ,பெரும்பாலும் என்ன அதை மட்டும்தான் கொடுப்பார்கள் மாணவிகளுக்கு வளைப்பந்து.
     
 வகுப்புக்கு எத்தனை பேர் இருந்தாலும்(குறைந்தது முப்பது,நாற்பது) இருப்பதென்னவோ ஒரே பந்துதான்.விதிமுறைகளெல்லாம் தெரியாது.அணிக்கு எத்தனை பேர் தெரியாது..கோல் என்று  ஒன்று இருப்பதெல்லாம் தெரியாது பந்து யாருக்கு அருகில் வந்தாலும் உதைப்போம்.அவ்ளோதான். லட்சியமெல்லாம் பீரியட் முடிவதற்குள் பந்தை ஒருமுறையாவது உதைத்துவிட வேண்டுமென்பதுதான்
அதற்கெல்லாம் சேர்த்து வாய்ப்பு கிடைத்தது +1ல் அப்போது ஆங்கிலம் தவிர  பிற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமலிருந்தனர் சிலநாட்கள்.அந்நாட்களில் மைதானமே குடியாக இருந்தோம்.ஏதாவது புது ஆசிரியர் வந்தால் எங்களை மைதானம் வந்து தான் வகுப்புக்கு அழைக்க வேண்டும்.அத்தைகைய நாட்களில் தான் PET வாத்தியாரை தாஜா செய்து நீண்ட நாள் வெறியை தீர்த்துக்கொண்டோம்.

ஆப் கி பார் 

அமைச்சர்கள் ;ஜி,,இத்தனை மக்கள் நம்மள நம்பி ஓட்டு போட்டு இருக்காங்களே,அவங்களுக்கு நாம என்ன செய்யப்போறோம்?

மோடி; இவ்வளவு நாளா காங்கிரஸ்காரங்க என்ன பண்ணாங்க?

அமைச்சர்கள் ; அவங்க தான் ஒண்ணுமே பண்ணலயே ஜி!

மோடி; நாமலும் அதான் பண்ணப்போறோம் :)


என்மொழி சில

"இட்லியும் பரோட்டாவும் பார்சலுக்கழகு "
"கேக்கறவன் கூமுட்டையா இருந்தாஆண்ட்ராய்டு ஃபோன் சார்ஜ் ஆறு நாள் நிக்கும்னு சொல்லுவாங்க ..,"
"சித்திரமும் கைபழக்கம்"
"செந்தமிழும் நாபழக்கம் "
வரிசையில்

"கியர் வண்டியும் க்ளட்ச் பழக்கம்"
 
அறிவிப்பு  
மாபெரும் குறு - கதைப் போட்டி

சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.

“விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ”செல்வமுரளி” மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு - கதைப் போட்டி. 
 கதைகள் அனுப்ப கடைசி தேதி : 05.07.2014 
மேலதிக  விபரங்களுக்கு 
http://yeskha.blogspot.in/2014/06/blog-post.html
https://www.facebook.com/yeskha.karthik
கலந்துகொள்ளுங்கள்  நண்பர்களே வாழ்த்துகள்.

நட்புடன்,
ம.கோகுல்

மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 16- 26/06/2014"

Friday, March 7, 2014

போடப்போறேன் ஓட்டு


 



தமிழ்நாட்டிலிருந்து இந்த ஜனவரில தான் புதுவை வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தோம்.தமிழ்நாட்டு டாஸ்மாக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு நபர் ஒரு பாட்டில் திட்டம் இங்கே செல்லுபடியாகாது என்பது இங்கே கூடுதல் தகவல்.


                   



கடந்த தேர்தலில் வாக்களித்த போது எனக்கு அடையாள அட்டை கிடையாது,இப்போ விண்ணப்பிக்கும் போது அது எப்படிங்க இல்லாம இருக்கும் அதான் அப்பப்போ முகாம் போட்டு குடுக்குறாங்களேனு குறுக்கு விசாரணை நடத்தி ,கவர்மெண்ட் எவ்வளவுதான் செஞ்சாலும் மக்கள் அலட்சியமாக இருக்குறாங்க என அங்கலாய்த்துக்கொள்ள ,குற்ற உணர்வு உறுத்தியது நாம தான் கொஞ்சம் அசட்டையா இருந்துட்டமோ?சரி இந்த முறை அந்த இழிச்சொல் பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது என முடிவெடுத்து வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்ததை அறிந்தவுடன் அதற்கான முஸ்தீபுகளை துவக்கினேன்.

அடையாள அட்டை முதலில் வாக்களிக்கும் மையத்திலே கிடைக்கும் என்றார்கள்,அங்கே போய் விசாரித்ததில் தாலுகா அலுவகத்தில் இயங்கும் தேர்தல் துறை அலுவலகத்தை அணுக சொன்னார்கள்,அம்மாவும் அப்பாவும் போய் வாங்கி வந்தார்கள்,எனக்கும் என் மனைவிக்கும் கேட்டதற்கு நாங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்
அவர்களே வர வேண்டும் என் சொன்னார்களாம்.


நான் இன்று போய் இருவரின் ஒப்புகை சீட்டை கொடுத்து தலா ரூ25 செலுத்தி ரசீது  தந்தார்கள் வாங்கிக்கொண்டேன்.அப்பறமா சொன்னாங்க மிஷின் ரிப்பேர்ல இருக்கு போயிட்டு அடுத்த வாரமா வாங்க அப்படின்னு.அடுத்த வாரம் நான் மட்டும் தான் வர முடியும் (இன்னைக்கும் நான் மட்டும் தான் போயிருந்தேன்),ரெண்டு பேரோட அடையாள அட்டையும் என்கிட்டயே தருவீங்களான்னு கேட்டேன்,.அவங்க சிம்பிளா சொன்னாங்க

"ம்ம்ம்.no problem"

அப்போ  ஆரம்பித்து வீடு வரும் வரை ஒலித்தது எனது காதுகளில் நாங்க ரொம்ப
ஸ்ட்ரிக்டு....,ஸ்ட்ரிக்டு.......,ஸ்ட்ரிக்டு................,ஸ்ட்ரிக்டு


# அட அப்பரசண்டிகளா இத முன்னமே அப்பா அம்மா வந்தப்போ குடுத்திருந்தா எனக்கு ரெண்டு நாள் அலைச்சல் ,அரை லிட்டர் பெட்ரோல், ரெண்டு மணிநேரம் மிச்சமாகியிருக்குமே.



     [அடுத்த முறை இவங்களுக்கு எந்த தொகுதில ஓட்டு இருக்குன்னு விசாரிக்கணும்]

இப்போ  மேலே இருக்கும் சிவப்பு வண்ண எழுத்துகளை மீண்டும் வாசிக்க.
என்ன  நடந்தாலும் சரி நான் போடப்போறேன் ஓட்டு.
என்ன போட்றுவமா?

நட்புடன்,

ம.கோகுல்


மேலும் வாசிக்க "போடப்போறேன் ஓட்டு "

Wednesday, January 8, 2014

பல"சரக்கு"கடை 15- 08/01/2014

வணக்கம் நண்பர்களே,
   சற்று தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.வருஷமும்,பிகரும் கடந்து போனா திரும்பி பாக்குறது சகஜம் தானே?லைட்டா ரொம்பவே லைட்டா திரும்பி தான் பாப்பமேன்னு பாத்தேன்,எனக்கான வரையில் திருமணமானதும் கேட்கப்படும் டெம்ப்ளேட் கேள்விக்கான பதிலா இருந்தாலும் ஆமாங்க என்ற பதில் சொன்ன  போது ஒரு குறுகுறுப்பான அனுபவத்தை அளித்த ஆண்டு இதுதான்,அவ்வகையில் மறக்க முடியாத ஆண்டு.(வேற எதுவும் சொல்லிக்குற மாதிரி பண்ணல).
                                                நன்றி-வெங்கட் நாகராஜ் சார்
வலையுலகில்  கடந்த ஆண்டில் ஒன்பது பதிவுகள் மட்டுமே(சோம்பேறித்தனத்தின் உச்சம்).அதிலும் ஒன்று சீனுவினாலும் (காதல் கடிதம்)இன்னொன்று பதிவர் சந்திப்புக்கான அறிவிப்பும்.எப்பவும்,எல்லோரும் சொல்லும் பதிலைப்போலவே "இனிமே அடிக்கடி எழுத முயல்கிறேன்".ஆகஸ்டு புரட்சியில் கலந்து கொண்டது சிலிர்ப்பான அனுபவம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்புறம் ஒரு காமன்மேன் வாழ்க்கைல அடுத்த இடம் என்னவா இருக்க முடியும்?absolutely சினிமா.

அனுபவித்து பார்த்த படங்கள்-ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,பரதேசி,சூது கவ்வும்,விஸ்வரூபம்
ரசித்து பார்த்த படங்கள்-நேரம்,மூடர்கூடம்,இ.தா.ஆ.பாலகுமாரா,ஆ.கா.செய்வீர்,சென்னையில் ஒரு நாள்

சினிமாவாக மட்டும் பார்த்து ரசித்த படங்கள்-வ.வா.சங்கம்,ஆரம்பம்,சிங்கம்2,பாண்டியநாடு,இவன் வேற மாதிரி,என்றென்றும் புன்னகை
பார்க்க(தவறவிட்ட)  நினைக்கும் படங்கள்-விடியும் முன்,6மெழுகுவர்த்திகள்,ஹரிதாஸ்,தலைமுறைகள்,பிரியாணி,இரண்டாம் உலகம்
நொந்த படங்கள்-வேணாம் விடுங்க பாத்து நொந்ததே போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேட்பதற்கு மட்டுமல்லாமல் மேக்கிங்கிலும் அசத்தி திரும்ப திரும்ப பார்க்க வைத்த பாடல்கள் சில,

பார்க்காதே,பார்க்காதே-வ.வா.ச
காதல் என்னுள்ளே -நேரம்
என் வீட்டுல நான் - இ.தா.ஆ.பாலகுமாரா
என் ஃப்யூசும் போச்சே-ஆரம்பம்(இந்த பாட்டு எடுக்கும் போதும் பார்த்தேன் )
இன்னும்  கொஞ்ச நேரம்-மரியான்
உனை காணாத-விஸ்வரூபம்

                              இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்


இதுvise versa லிஸ்ட்

fy fy fy-பாண்டியநாடு(பாடிய வாயும் ஆடிய காலும் ஒன்றாயிருந்திருப்பின் இது முந்தையலிஸ்டில் வந்திருக்கக்கூடும்)
கடல் படத்தின் எல்லா பாடல்கள்
அவத்த  பையா-பரதேசி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

போயிட்டு வாங்க தல


  நான் கிரிக்கெட் பார்க்க,விளையாட தொடங்கியதில் முழு முதல் காரணம் சச்சின்.அந்த வகையில் இந்த விஷயம் நடக்காமலிருந்திருக்கலாம் என உள்ளிருந்து ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஞ்சலி


                                                             Peace In Rest


நீங்கள் இந்த மண்ணிற்கு விட்டுச்சென்றதை விட
விதைத்து சென்றவை அதிகம்......,

நம்மை இயற்கையோடு இணைத்து
இயற்கையோடுஇணைந்த இயற்கையை வணங்குவோம்.


மற்றும்  வாலி ,மணிவண்ணன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அரசியல்
தமிழகத்திலிருந்து புதுவை வாக்காளர் பட்டியலுக்கு மாற்றலாகிவிட்டது,அப்புறமென்ன -அய்யய்யோ நீங்க நினைக்குற மாதிரி இல்ல வர்ற தேர்தலுக்கு ஓட்டு போட்டுற வேண்டியதுதான்.

அடிச்சான் பார்றா மொத பால்லயே சிக்சர் அவார்டு 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புத்தாண்டுன்னா resolution இல்லாமலா டெப்பனட்லி,
டெப்பனட்லி



                                   ஒரு சில செடிகளுடனாவது இந்த ஆண்டை கடப்போம்.
                                                                வாழ்த்துகள் 2014.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
2014 நிச்சயம் மறக்கவியலாத ஆண்டாக அமையும்,ஆம்,எனக்கான புது உலகம் இன்னும் சில நாட்களில் பிறக்கவிருக்கிறது.நினைத்துப்பார்க்கவே மனம் பரபரக்கிறது சொல்லவியலாத எண்ணங்கள் ,உணர்வுகளுடன் அந்நாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.பிரசவிக்கப்போவது நானில்லை,போதிலும் அடிவயிற்றில் விறுவிறுக்கிறதெனக்கு.
 சந்திப்போம்!!!
நட்புடன்,
ம.கோகுல் 



மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 15- 08/01/2014"